News January 12, 2026

நெல்லை: ரூ.12,000 வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

நெல்லை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பஹ்மிதா ஷக்வத். வழக்கறிஞரான இவர் அங்குள்ள ஒரு கடையில் பீட்சா வாங்கியபோது கடை விளம்பரத்துடன் கூடிய பார்சல் பாக்சுக்கு கூடுதலாக ரூ.4 வசூலிக்கப்பட்டது. இதுக்குறித்து அவர் அளித்த புகாரின் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்குள் ரூ.12,000 வழங்க உத்தரவிட்டது.

Similar News

News February 3, 2026

நெல்லை : இனி டாக்டர் பீஸ் FREE..!

image

நெல்லை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்<>கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கி முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். வீட்டில் இருந்தே தீர்வு. அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 3, 2026

நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை!

image

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுப்பம்மாள் (34) இவர் கணவர் சிறையில் உள்ளார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சுப்பம்மாள் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 3, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.2] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த் அன்டோ ஆரோக்யராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!