News April 24, 2024

நெல்லை ரயில் நிலையம் மூலம் ரூ.130 கோடி வருவாய்

image

ரயில் நிலையங்களின் வருமானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கையின்படி 2013 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை மதுரை கோட்டத்தில் முதல் 50 இடங்களை பிடித்துள்ள ரயில் நிலையங்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் ரூ.130 கோடி வருமானத்தை அள்ளி கொடுத்து திருநெல்வேலி ரயில் நிலையம் 2023-24ஆம் நிதி ஆண்டில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Similar News

News February 9, 2026

திருநெல்வேலி: மர்மமான முறையில் ஒருவர் கொலை

image

நெல்லை மூன்றடைப்பு காவல் நிலைய சரகம் பாணாங்குளத்தில் நேற்று இரவு இசக்கி பாண்டி(48) என்ற நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மூன்றடைப்பு காவல்துறையினர் சம்பவ இடம் சென்று இறப்பிற்கான காரணம் குறித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News February 9, 2026

திருநெல்வேலியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை, பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

News February 9, 2026

நெல்லை: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

image

நெல்லை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நெல்லை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0462- 2576265. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!