News October 13, 2025
நெல்லை மின்வாரியத்தின் மழைக்கால எச்சரிக்கை

மழைக்காலம் தொடங்கி விட்டதால் நெல்லை மாவட்ட மின்வாரியம் சார்பில் பொது மக்களுக்கு மின் விபத்து இன்றி செயல்படுவது குறித்த விளக்கங்களை தினமும் அளித்து வருகின்றனர். இன்று விடுத்துள்ள அறிவிப்பில், வீடுகளில் உள்ள பழைய உருகிய மின் இணைப்பு கம்பிகள் இருந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே எலக்ட்ரீசியன் வைத்து பழைய உருகிய மின்கம்பிகளை உடனடியாக மாற்றி அமைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 13, 2025
போராட்டத்தை தடுக்க போலீஸ் முயற்சியா? – எஸ்பி பகீர் தகவல்

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து போராட்டம் நடத்த இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போராடும் மக்களை போலீஸ் தடுக்க முயல்வதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு கூறி வருகிறது. இது முற்றிலும் தவறானது; சட்டப்படியான போராட்டத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
News October 13, 2025
BREAKING: சேரை கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

சேரன்மகாதேவி பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி பேராசிரியர் ஒருவரை மாணவர்கள் தாக்கினர். எனவே மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பேராசியர் மீது புகார் எதுவும் கொடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் பேராசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
நெல்லை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <