News May 14, 2024

நெல்லை: மின்னல் தாக்கி மூதாட்டி பலி

image

முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆண்டாள் (60) என்பவர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மழை பெய்ததால் சாலையோரத்தில் மரத்தடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மூதாட்டி ஆண்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 3, 2025

BREAKING நெல்லை: 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

image

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, ராதாபுரம் தலைமை ஆசிரியை ரத்தினாள் சுமதி, மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன், வீரள பெருஞ்செல்வி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா புஷ்பராணி, ஆசிரியை பாக்கியலட்சுமி உள்ளிட்ட 9 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

News September 3, 2025

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செப்டம்பர் 7, 10, 13, 14 தேதிகளில் நெல்லை ஸ்ரீபுரத்தில் ரோஹிணி கோல்டு அகாடமியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது. தங்கத்தின் தரம், ஹால்மார்க், உரைகல், கேரட், விலை நிர்ணயம், போலி நகைகள் கண்டறிதல் குறித்து கற்பிக்கப்படும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பயிற்சியில் மேலும் விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும். *ஷேர்

News September 3, 2025

நெல்லையில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளையங்கோட்டை, வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள ஈப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!