News April 15, 2025

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி துறை இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி தனியார் பள்ளிகளிலும் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 16, 2025

நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்

image

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

News April 16, 2025

கோடை வெயில் கலெக்டர் முக்கிய அறிவுரை

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று (ஏப்ரல்15) விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: அடுத்து வரும் நாட்களில் கோடை வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் விவரம் மாவட்ட காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கைபேசி எண் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!