News January 6, 2025
நெல்லை மாவட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம்

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி சிலம்பரசன் இன்று (ஜன 6) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 கொலை வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
Similar News
News February 9, 2026
மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 9 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 9, 2026
நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் பெற? இதை பண்ணுங்க!

நெல்லை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News February 9, 2026
துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்; வனத்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் வனச்சரக்க பகுதிகளில் வாழும் கிராம மக்கள் நாட்டு துப்பாக்கி அல்லது அனுமதி இல்லாத கள்ள துப்பாக்கிகளை வைத்திருந்தால் தாமாக முன்வந்து வரும் 20 ஆம் தேதிக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


