News April 24, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்களுக்கு பரிசு விழுந்ததாக கூறி, செல்போனில் வரும் போலியான Message-யை நம்பி OTP, PIN, Password போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். ஒருவேளை பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 10, 2025

நெல்லை போலீஸ் தேர்வில் 691 பேர் ஆப்சென்ட்

image

நெல்லையில் போலீஸ் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு அமைதியாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் அனுமதிக்கபட்ட 4905 பேரில் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 4214 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்காதவர்கள் 691 பேர் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

News November 10, 2025

நெல்லை: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

image

நெல்லை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க SHARE பண்ணுங்க.

News November 10, 2025

நெல்லை: 500 கிலோ வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஆளில்லாத வீட்டில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த ஆளில்லாத வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!