News October 16, 2025
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 84 அடி, நீர் வரத்து : 135.97 கனஅடி வெளியேற்றம் : 350 கன அடி; சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 96.98 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL; மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118, நீர் இருப்பு : 92.11 அடி, நீர் வரத்து : 201.29 கனஅடி, வெளியேற்றம் : 30 கனஅடி; வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 11 அடி.
Similar News
News October 16, 2025
நெல்லை – தாம்பரம் இன்று சிறப்பு ரயில் விவரம் இதோ

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்று மற்றும் 18ம் தேதி சனிக்கிழமை ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லை, வள்ளியூர் வழியாக கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுதினம் காலை 11. 25 மணிக்கும், வள்ளியூருக்கு 11.43 மணிக்கும் வந்து சேரும்.
News October 16, 2025
தொடர் கனமழை.. நெல்லை ஆணையர் அறிவுறுத்தல்

பருவமழைகால முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவும், போர்க்கால அடிப்படையில், பணிகளை மேற்கொள்ளவும் திருநெல்வேலி மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள் தலைமையின் கீழ் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார். மாநகரமக்கள் எந்த நேரமும் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
News October 16, 2025
BREAKING: நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பாளை, சேரன்மகாதேவி வட்டாரங்களில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.