News August 27, 2025
நெல்லை மாவட்டத்தில் 47,392 மாணவர்கள் பயன்

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் 804 பள்ளிகளில் 34,277 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். நேற்று 5-ம் கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள 210 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,115 மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 1,014 பள்ளிகளில் 47,392 மாணவர்கள் இப்போது பயனாளிகளாக உள்ளனர்.
Similar News
News August 27, 2025
எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர்

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் குறைதீர்வு கூட்டம் நாளை பிற்பகல் 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என ஆர்டிஓ சுகன்யா தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
நெல்லையப்பர் கோவில் வளாக கடைகள் அகற்ற காலக்கெடு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மர மண்டபத்தில் உள்ள கடைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் அவற்றை அகற்ற உத்தரவிட்டது. இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி நேரில் விளக்கமளித்தார். கோயிலை புராதன நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், பழைமையான மரச்சிற்பங்களை பாதுகாக்க வலியுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
News August 27, 2025
தூய்மை பணியாளர்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை – ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் இரா.சுகுமார், பணியிட பாதுகாப்பு, சீருடை, ஊதியம் உறுதி செய்ய உத்தரவிட்டார். நான்கு பணியாளர்களுக்கு ரூ.59,000 மதிப்பில் இறப்பு, கல்வி, மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.