News April 25, 2025

நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 158 % மழை

image

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வழக்கமான மழை அளவான 41.30 மில்லி மீட்டரை விட 158.83% அதிகம் ஆகும். நடப்பு ஏப்ரல் மாதத்தில் 23ஆம் தேதி வரை 63.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 5.51% கூடுதல்.

Similar News

News April 26, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் தடுப்பு செயலியின் பயன்பாடுகளை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர், ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

News April 25, 2025

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.25] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 25, 2025

அரசு பேருந்துடன் மினி லொடு வேன் மோதி விபத்து

image

திசையன்விளையில் இருந்து நவ்வலடி நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நவ்வலடியிலிருந்து திசையன்விளை நோக்கி வந்த மினி லோடு வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லோடி வேன் சாலையில் கவிழந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!