News December 11, 2025

நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் துவக்கம்

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலையில் 10, 12 ம் வகுப்புகளுக்கும் பிற்பகலில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 15ஆம் தேதி தொடங்குகிறது.

Similar News

News December 11, 2025

நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

நெல்லை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News December 11, 2025

நெல்லை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

திசையன்விளை அருகே சிவந்தியாபுரத்தை சேர்ந்த சுடர்செல்வி (20), திருமணமான சில மாதங்களிலேயே கணவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

நெல்லையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!