News November 16, 2024
நெல்லை மாவட்டத்திற்கு ரூ.4 கோடி 89 லட்சத்து 95 ஆயிரம் கிடைக்கும்

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 மாவட்டங்களிலும் தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர் முதல் உதவியாளர் வரை அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் 171 கோடி மதிப்பூதியம் அனுமதி வழங்கி தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நெல்லை மாவட்டத்திற்கு ரூ.4 கோடியே 89 லட்சத்து 95 ஆயிரம் கிடைக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.
Similar News
News March 6, 2026
நெல்லை: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.
News March 6, 2026
நாங்குநேரி சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதா? – திருமா

நெல்லை வருகை தந்த திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்:- நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா? என கண்டறிய வேண்டும். போதை பழக்கம் மட்டும்தான் காரணம் என்றாலும் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் பேட்டி அளித்தார்.
News March 6, 2026
நெல்லை காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கீழ், மாநகர பகுதிகளான நெல்லை டவுண், பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மருத்துவக்கல்லூரி, மேலப்பாளையம், பெருமாள்புரம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்களின் எல்லைகளில் இன்று (மார்ச்.5) இரவு ரோந்து பணி அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. திருநெல்வேலி டவுண் சரகம் உதவி ஆணையர் இளவரசன் ரோந்து பணிகளை மேற்பார்வையிடுவார்.


