News March 9, 2025
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 செமீ மழை பெய்யக் கூடும்.
Similar News
News September 11, 2025
நெல்லை தீபாவளி பட்டாசு கடை – கலெக்டர் முக்கிய அறவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி பொருட்கள் விதிகளின்படி தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய விரும்புபவர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற www.tnsevai.tn.gov.in என்ற வெப் போர்டலில் இ சேவை மையங்கள் மூலம் 10.10. 25ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
நெல்லை ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

நெல்லை மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…!
News September 10, 2025
நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

இன்று காலை 10 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
பாளையங்கோட்டை என் ஜி ஒ ஏ காலனி பகுதியில் 2 இடங்களில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா காலை 10:30 மணிக்கு அப்துல் கப் எம்எல்ஏ தலைமையில் நடக்கிறது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.