News February 7, 2025

நெல்லை மாநகர டவுன் காவல்துறை உதவி ஆணையர் பொறுப்பேற்பு

image

நெல்லை மாநகர டவுன் காவல்துறை உதவி ஆணையராக K.அஜிகுமார் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் பணகுடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்து பதவி உயர்வும் மூலம் காவல் உதவி ஆணையராக பொறுப்பேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News August 23, 2025

நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 22, 2025

BREAKING: நெல்லை வந்தடைந்தார் அமித்ஷா

image

நெல்லை மாவட்டத்தில், பாஜக பூத்கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா நெல்லை வந்தடைந்தார். நயினார் நாகேந்திரன் வீட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்முருகன், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பின்னர் நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

News August 22, 2025

நெல்லை: வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து

image

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் அறை நெல்லை ரயில் நிலையம் அருகே உள்ள பாலபாக்கிய நகர் பகுதியில் உள்ளது. அங்கு சமையலறை பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொதிக்கும் எண்ணெய் சட்டி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!