News January 12, 2026

நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 2, 2026

தங்கப்பதக்கம் வென்ற கூடங்குளம் மாணவன்

image

கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி – திருமணி செல்வி தம்பதியினரின் மகன் சித்திரை சதீஷ் என்பவர் நேற்று (பிப் 1) நடைபெற்ற 7th ஜூனியர் பால் பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட அளவிலும் பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார். எனவே மாணவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News February 2, 2026

நெல்லை: 10th முடித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி! NO EXAM

image

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 2, 2026

நெல்லை: 16ம் தேதி வரை தடை உத்தரவு அமல்

image

திருநெல்வேலி மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவித்துள்ளார். இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

error: Content is protected !!