News August 11, 2025

நெல்லை மாநகரில் 8 மாதங்களில் 11 கொலைகள்

image

நெல்லை மாநகரில் கடந்த 8 மாதங்களில் 11 கொலைகள் நடந்துள்ளன. கே.டி.சி.நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை மற்றும் நெல்லை டவுனில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. போலீசார் கூறுகையில், பெரும்பாலான கொலைகள் திடீர் மோதல்களால் நிகழ்ந்தவை, முன்விரோதமோ பழிக்குப்பழியோ இல்லை. குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, கொலைகள் குறைந்துள்ளதாகவும், பல கொலைகள் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Similar News

News August 12, 2025

நெல்லை மாவட்டத்தில் 8 மாதங்களில் 17 பேர் கொலை

image

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட பகுதியில் மட்டும் இந்த ஆண்டு 8 மாதங்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் உட்கோட்டத்தில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சமீபத்தில் ராதாபுரம் பகுதியில் பிரபுதாஸ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News August 11, 2025

நெல்லையில் வயிற்றுவலி தீர்க்கும் வேப்பிலைப் பிரசாதம்

image

கங்கைகொண்டான் அருகே வடக்கு செழியநல்லூரில் சயன வனதுர்கை, வைஷ்ணவி துர்கை அம்பாள் கோயில் உள்ளது. இங்கு மகாலிங்க மரம் மற்றும் வேப்ப மரத்தின் அடியில் கிழக்கு நோக்கி சயன கோலத்தில் 8 கரங்களுடன் பெண் குழந்தையை அணைத்தபடி காட்சிதருகிறாள் துர்கை. இங்குள்ள வேப்ப மரத்தின் இலையை அரைத்து சாறு எடுத்துக் குடித்தால், வயிற்றுவலி பாதிப்புகள் நீங்கும். இங்கு தாழம்பூ குங்குமத்துடன், வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

News August 11, 2025

திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி இன்று திடீர் கைது

image

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து இன்று ஆகஸ்ட் 11 டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர். இதில், நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டார். எம்பிக்கள் உடன் அவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.

error: Content is protected !!