News October 10, 2025

நெல்லை மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி அபராதம்?

image

திருநெல்வேலி மாநகராட்சி, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தாமிரபரணி நதிக்குள் வெளியேற்றியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) கண்டறிந்துள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்காக மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது

Similar News

News October 10, 2025

நெல்லை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 10, 2025

நெல்லை மாவட்ட மின்வாரியம் அறிவுறுத்தல்

image

நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் மழைக்கால மின் விபத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இன்று (அக்டோபர் 10) விடுத்துள்ள செய்தி குறிப்பில் மின் மாற்றிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகள் அமைந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தால் அந்த நீரில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News October 10, 2025

நெல்லையில் 2 தனிப்படை அமைத்து தேடப்படும் கைதி

image

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த முத்துச்செல்வன்(34), கோவில்பட்டியில் தகராறில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், கழிவறை செல்வதாக கூறி தப்பினார். பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். நெல்லையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோவில்பட்டி போலீசாரும் தேடுதல் நடத்துகின்றனர்.

error: Content is protected !!