News October 23, 2025
நெல்லை: மழைக்காலத்தில் இந்த App பயன்படுத்துங்க

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை குறித்து விபரங்களை அறிந்து கொள்ள “டி என் அலர்ட்” என்ற செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த செயலியில் மழை மற்றும் வானிலை குறித்து 4 நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகும். பேரிடர் காரணமாக புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இது உதவும்.
Similar News
News October 23, 2025
நெல்லை: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை.,

நெல்லை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News October 23, 2025
நெல்லை: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் சேர்ந்தவர் தங்கையா. இவர் களக்காடு அருகே சொந்தமாக இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் இறைச்சி கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் தங்கையா சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த தங்கையாவை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கையா பரிதாபமாக உயிரிழந்தார்.
News October 22, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.22] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


