News October 29, 2025

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வேலை

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய கருவிகளுக்கான சர் சி வி ராமன் மையத்தில் 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 திட்ட உதவியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கல்வித்தகுதி மற்றும் விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதி உடையவர்கள் சுயக்குறிப்புடன் அக்.29ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்காணலில் பங்கேற்கலாம். SHARE

Similar News

News October 29, 2025

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்: பாபநாசம் அணை 143/64.96%, மணிமுத்தாறு அணை 118/70.72%, சேர்வலாறு அணை 156/57.68%, வடக்கு பச்சையாறு அணை 49.20/ 4.68%, நம்பியார் அணை 22.96/21.21%, கொடுமுடியாறு அணை 52.50/88.25% ஆகா உள்ளது. சில அணைகளில் மட்டும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

News October 29, 2025

நெல்லை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

நெல்லையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருப்போருக்கு SHARE பண்ணுங்க

News October 29, 2025

நெல்லையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து எரிவாயு நபர் அவர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!