News November 5, 2025

நெல்லை: பேராசிரியர் மீது கல்லூரி மாணவி புகார்

image

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர், தனது துறை பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கல்லூரி நிர்வாகம் அவருக்கு துணை போவதாகவும் மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

நெல்லை: பேருந்து மீது லாரி மோதி விபத்து

image

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில் இஸ்ரோ நுழைவு வாயில் அருகே நான்கு வழிச்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் லாரி மோதியது. இதில் லாரி டிரைவர் காயமடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து அணுகுசாலையில் மாற்றி விடப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் இடமாற்றம்

image

நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சங்கீதா சின்னராணி பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

நெல்லை: தலைமை செயலகத்தில் வேலை..இன்றே கடைசி

image

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த மாதம் நடைபெறும்.

error: Content is protected !!