News November 1, 2025
நெல்லை: பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்தவர் முத்தரசி 43. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் கணவர் பாலகணேஷ் கடந்தாண்டு இறந்தார். மகள்களுடன் முத்தரசி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். சில நாட்களாக முத்தரசி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சாந்தி கடைக்கு சென்ற நேரத்தில் முத்தரசி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 2, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.1] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News November 1, 2025
ஆற்றில் எச்சரிக்கையுடன் இறங்குங்கள் – மாவட்ட நிர்வாகம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக இன்று (நவ.1) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் தாமிரபரணி ஆற்றில் இறங்கவும் நீராடவும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் டாக்டர் இரா.சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
News November 1, 2025
ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா தளம்

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி 59 லட்சம் மதிப்பிலான சாகச சுற்றுலாத்தலம் மேம்பாடு செய்யப்படுகிறது. இதனை சபாநாயகர் அப்பாவு இன்று அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். இங்கு சாகச சுற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகள் அமைக்கப்படும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.


