News September 18, 2025

நெல்லை: பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

image

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பூவன்குளம் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து அங்கு சென்ற நிலையில் தீ மேலும் பரவியதால் கூடுதலாக சேரன்மாதேவி, பாளையங்கோட்டை மற்றும் தென்காசி தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Similar News

News September 18, 2025

நெல்லை: ரயில் நிலையத்தில் கொலை

image

நெல்லை ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு பயணிகள் 3 பேரை வாலிபர் தாக்கியதில் கோவை முதியவர் தங்கப்பன் உயிரிழந்தார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பீகார் மாநிலம் மண்டூலாவை சேர்ந்த சூரஜ் 25 என்பவரை போலீசார் விசாரிக்கின்றனர். அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் விழிப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக என சந்தேகிக்கின்றனர்.

News September 18, 2025

நெல்லை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்

image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தை சேர்ந்த தவசிக்கனி, மனைவி அன்னசெல்வத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தபோது, மது அருந்த பணம் கேட்டு அன்ன செல்வம் மறுத்ததால் ஆத்திரமடைந்த தவசிக்கனி, அவரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அன்ன செல்வம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுக்குறித்து களக்காடு போலீசார் விசாரணை.

News September 18, 2025

தென் மாவட்ட சிறப்பு ரயில்களுக்கு முன் பதிவு விறுவிறுப்பு

image

தீபாவளி பண்டிகை ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் ஏற்கனவே சென்னை – நெல்லை உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தன. இதையடுத்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கபட்டன. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக சென்னை – நெல்லை – நாகர்கோவில் ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டன மேலும் ஒரு ரயில் அறிவிக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

error: Content is protected !!