News August 19, 2025

நெல்லை பள்ளி மாணவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை

image

தபால் தலை சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக தீன் தயாள் ஸ்பார்ஸ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் செப்.1ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News August 19, 2025

நெல்லை: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

image

நெல்லை மக்களே; ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 Clerk காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025. தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

நெல்லையில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

▶️நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
▶️நெல்லை சந்திப்பு ராஜ் மஹாலில் வைத்து காலை 10 மணிக்கு புகைப்பட கண்காட்சியினை மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.
▶️நெல்லை சந்திப்பு ஆர் கே வி மஹாலில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் முகாமினை எம் எல் ஏ அப்துல் வஹாப் 10 மணிக்கு துவக்கி வைக்கிறார்.

News August 19, 2025

நெல்லையில் தங்க நகை பயிற்சி பட்டறை

image

தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஆகஸ்ட் 23, 24, 27, 31 அன்று நெல்லை ஸ்ரீபுரத்தில் ரோஹிணி கோல்ட் அகாடமியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் பயிற்சியில் தங்கத்தின் தரம், ஹால்மார்க், கல், விலை நிர்ணயம், போலி நகைகள் அடையாளம் காணுதல் கற்றுத்தரப்படும். 18 வயது மேல் ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். (விவரங்களுக்கு www.rohinigoldacademy.com) *SHARE IT

error: Content is protected !!