News September 12, 2025
நெல்லை பயணிகளுக்கு புதிய வசதி

நெல்லையிலிருந்து அவசரப் பணிக்கு சென்னை செல்பவர்கள் தூத்துக்குடி விமான நிலையம் சென்று விமானத்தில் பறக்கின்றனர். நெல்லையில் இருந்து விமான நிலையம் 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதை இணைக்கும் நான்கு வழிச்சாலையில் தடையின்றி செல்வதற்கு வசதியாக பாளை அருகே வசவப்பபுரம், முறப்பநாடு, மங்களகிரி உள்ளிட்ட 5 பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
நெல்லை: வாய்க்காலில் விழுந்தவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிங்கி குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாநிதி நேற்று முன்தினம் இரவில் மேலகரை பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் தவறி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் தண்ணீர் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 12, 2025
நெல்லையில் ஒத்த கையில் அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவர்

திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியிருக்கிறார். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பயணிகள் இந்த ஓட்டுநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 12, 2025
நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476,9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.