News October 22, 2025
நெல்லை: நீர்வரத்து பகுதியில் ஆட்சியர் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சிற்றாறு மற்றும் குளங்களுக்கு வருகின்ற நீர்வரத்து பகுதிகளை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் சுகுமார் முக்கூடல் பகுதில் இன்று (அக்.21) பிற்பகல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News October 22, 2025
நெல்லை: பைக் மோதி ஒருவர் பலி

விக்கிரமசிங்கபுரம் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சக்தி வடிவேல் (57) மரக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த 16 ம் தேதி இரவு விக்கிரமசிங்கபுரம் சந்தனமாரியம்மன்கோயில் அருகில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர் சக்தி வடிவேல் மீது மோதியதில் பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
News October 22, 2025
நெல்லை : EB இலவச சலுகை தெரியுமா உங்களுக்கு ??

நெல்லை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News October 22, 2025
தீபாவளி விதிமீறல் பட்டியலை வெளியிட்ட எஸ்பி

நெல்லையில் தீபாவளி பண்டிகையின் போது விதிமீறல் தொடர்பாக மொத்தம் 521 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 83, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 200, அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு நேர விதிமுறை மீறல் சம்பந்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.