News October 20, 2025

நெல்லை: நவம்பர் 3ம் தேதி வரை தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகரில் இன்று அக்டோபர் 19 நள்ளிரவு 12 மணி முதல் வருகிற நவம்பர் மூன்றாம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் படி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா போன்றவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 20, 2025

நெல்லை: தீபாவளி மகிழ்ச்சி தொடரும் எண்கள் இதோ!

image

நெல்லை மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலைய எண்கள் திருநெல்வேலி (0462-2330101), பேட்டை (2342003), அம்பை (04634-250399), சேரன்மகாதேவி (260569), கங்கைகொண்டான் (04622-486500) மற்ற பகுதிகளின் எண்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.. மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க..!

News October 19, 2025

இன்று இரவு மாநகரில் காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News October 19, 2025

நெல்லை: ஊராட்சி செயலர் பணி APPLY விபரம்!

image

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!