News December 17, 2025
நெல்லை: தேர்வு தேதியில் மாற்றம் – கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த தேர்வு நிர்வாக காரணங்களால் வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த மையத்தில் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விபரம் மற்றும் நிலவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
நெல்லைக்கு முதலமைச்சர் வருகை.. முழு விவரம் இதோ…

நாளை (டிச.20) நெல்லை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இரவு 7 மணிக்கு திறந்து வைக்கிறார். டிச.21ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நெல்லை G.H மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
News December 19, 2025
நெல்லை – ஐதராபாத் நேரடி ரயில் இயக்கப்படுமா?

நெல்லை, குமரியில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவு விரைவில் இயக்கப்படுகின்றன. ஆனால், ஐதராபாத்துக்கு நெல்லை, குமரியில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, நெல்லையிலிருந்து ஹைதராபாத்திற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்க தென்மத்திய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
News December 19, 2025
நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருநெல்வேலி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


