News July 10, 2025

நெல்லை: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தாசில்தாரின் பணிகளான சான்றிதழ்கள் (சாதி, குடிமை, குடியிருப்பு, மதிப்பீடு) வழங்குதல், பட்டா மாற்றம், சிட்டா, அடங்கல் பராமரித்தல், அரசு வரிகள் வசூல், தேர்தல் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் இதுவரை ஏதேனும் ஒரு காரணத்திற்காக தாசில்தார் அலுவலகம் சென்றிருப்போம், இவற்றில் ஏதேனும் ஒன்றில் லஞ்சம் தொடர்பான புகார் எழுந்தால் 04622580908 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். பிறரும் பயன் பெற ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 25, 2025

முன்னீர்பள்ளம் தீ விபத்தில் புதிய தகவல்

image

திருநெல்வேலி ஆரைகுளத்தில் மகனின் திருமணத்திற்கு அழைக்காத கோபத்தில் தந்தை, மனைவி மற்றும் மற்றொரு மகனின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் நடந்துள்ளது. இதில் மனைவி மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் 50 % காயங்களுடன் தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். மூத்த மகனுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் மனைவியுடன் அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். குடும்பத் தகராறு இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியது.

News August 25, 2025

மனைவியை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற கணவர்

image

அம்பாசமுத்திரத்தில் செல்லையா(31) தனது மனைவி காவேரியை(28) தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, போலீசில் சரணடைந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட காவேரியுடன் குடும்ப தகராறு இருந்ததாக தெரிகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காவேரியின் உடலை தேடி வருகின்றனர். வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் நிறுத்தப்பட்டு, நாளை மீண்டும் தொடரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 25, 2025

நெல்லை: 2,240 கிராம செவிலியர் பணியிடங்கள்

image

நெல்லை: சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதாவில் கவர்னர் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களைச் சரிசெய்து, அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துள்ளதால் 2,240 கிராம சுகாதார செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!