News January 21, 2026
நெல்லை: தலைமறைவான கொலை குற்றவாளி கைது

திருநெல்வேலி மாநகர காவல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொலை வழக்கில், தொடர்புடைய திருநெல்வேலி பெருமாள்புரம் சுகுமார், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அதனைத்தொடர்ந்து, அவர் மீது நீதிமன்றத்தால் ‘பிடி வாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான குற்றவாளி சுகுமாரை இன்று {ஜனவரி.21} பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
Similar News
News February 11, 2026
நெல்லை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு சிறை

நெல்லை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு சுப்பிரமணியன் (72) என்பவர் 5 மற்றும் 6 வயதுடைய 2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்தார்.
News February 11, 2026
திருநெல்வேலி: Whatsapp மூலம் ரூ.15 லட்சம் மோசடி!

பாளை பெருமாள்புரத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் அனல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது வாட்ஸ்ஆப்-ல் மர்ம நபர் டிஜிட்டல் அரெஸ்ட் என பேசி ரூ.15 லட்சத்தை பறித்தார். இது குறித்து நெல்லை சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த்தா(26) அவரது தந்தை சீனிவாசன்(65), சாய் கிரண்(36) ஆகியோரை நேற்று கைது செய்தனர். *Awareness* ஷேர் பண்ணுங்க.
News February 10, 2026
இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவுநேர ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தில் ஹென்றி அமலதாஸ், நாங்குநேரி உட்கோட்டத்தில் சுப்பிரமணியன், வள்ளியூர் உட்கோட்டத்தில் ராஜாராம், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் வேல்ராஜ், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் சண்முகவேல் ஆகிய காவல் ஆய்வாளர்கள், இன்று (பிப்.8) இரவுநேர ரோந்து பணிகளில் ஈடுபடுவர்.


