News May 18, 2024
நெல்லை: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

நெல்லை மாவட்டத்தில் மே 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 17) சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு ஆய்வாளர் தலைமையில் 90 காவலர்கள் வந்தனர். பேரிடர் மீட்பு பணிகளுக்காக அவர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 5, 2025
திருநெல்வேலி மாநகரத்தில் 15 நாட்களுக்கு தடை

திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரத்தின் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் கூட்டங்கள் நடத்துவதற்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்படுவதாக திருநெல்வேலி மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
News September 5, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 5, 2025
பாஜகவில் நைனார் நாகேந்திரன் மகனுக்கு பொறுப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய நிர்வாகிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் ஆவார். இதுபோல் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் மாரியப்பனுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.