News December 30, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த யோசுவா (21), சாலமோன் (20) இருவரும் நேற்று இரவு 2 பேரும் டூவீலரில் உவரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ஊருக்கு திரும்பியபோது கூட்டப்பனை அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். எதிரே வந்த வேன் எதிர்பாரவிதாமாக பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 6, 2026
நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நெல்லை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
News January 6, 2026
நெல்லை: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

திருநெல்வேலி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!
News January 6, 2026
நெல்லை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

திருநெல்வேலி மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


