News November 24, 2025

நெல்லை: டிரைவர் தற்கொலை

image

திசையன்விளை அருகே இட்ட மொழி நன்னி குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் கண்ணன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீஸ் எஸ்ஐ பிரதீப் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Similar News

News November 24, 2025

நெல்லை: மழைக்கால ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்தது தொடர்ந்து இடைவிடாமல் இரண்டு தினங்களாக கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தகவல் வந்த இடங்களில் உடனடியாக மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. மழை காலத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்தது. இதனை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News November 24, 2025

நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

நெல்லை: மழை அலர்ட் செயலியை பயன்படுத்த வேண்டுகோள்

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் டிஎன் அலர்ட் என்ற செயலியை பயன்படுத்தி மழை மழை உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்பு நிலவரத்தை தமிழில் அறிந்து கொள்ள முடியும் பேரிடர் காரணமாக பாதிப்புக்கு உள்ளான மக்கள் புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலி உதவுகிறது. இதனை கூகுள் பிளே ஸ்டோர் ஆப்பிள் பதிவிறக்கம் செய்யுங்கள். SHARE!

error: Content is protected !!