News February 16, 2026

நெல்லை: டிகிரி முடித்தால் ரூ.58,514 சம்பளத்தில் RBI வங்கி வேலை!

image

நெல்லை மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

Similar News

News February 18, 2026

5 மாவட்ட பயிற்சியாளர்களுக்கு தடகளப் போட்டி தேதி அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பு 2025 – 26ம் ஆண்டிற்கான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல பயிற்சியாளர்களுக்கான தடகள விளையாட்டு போட்டி 24ம் தேதி காலை 9 மணி முதல் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலைய ஆண், பெண் பயிற்சியாளர்கள் பங்கேற்பார்கள்.

News February 18, 2026

நெல்லை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

News February 18, 2026

திருநெல்வேலி: வீடு புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

image

நெடுவிளையைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி தனஷ்(23). இவர் பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது ‘மழை கோட்’ அணிந்து வந்த பெண் ஒருவர் தனஷ் முகத்தை துணியால் மூடி அவரை அரிவாளால் வெட்டி விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!