News May 4, 2024

நெல்லை: சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் கே.பி.கே.ஜெயக்குமார். இவர் தனக்கு கொலை மிரட்டல் அடிக்கடி வருவதாக நெல்லை எஸ்பியிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள இவரது தோட்டத்தில் இன்று காலை (மே 4) எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

நெல்லை: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சிதம்பர நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம் தொடங்கும். விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி விளையாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News September 17, 2025

நெல்லையில் நான்கு நாட்கள் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப். 21, 26-28 ஆகிய 4 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் ரோகிணி கோல்ட் அகாடமியில் நடக்கிறது. தகுதி தேவையில்லை. பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். கட்டணம் ரூ.8,200. விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இல் தொடர்பு கொள்ளவும்.

News September 17, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!