News October 14, 2025

நெல்லை: கோழிக்கழிவுகள் விவகாரம் – ஒருவர் கைது

image

நெல்லை, மதவக்குறிச்சி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மர்ம நபர்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட கோழிகளின் உடல்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு மற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுக்குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டவுன் அண்ணா தெருவை சேர்ந்த பரத்மாரி என்பவர் கோழிக்கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. அவர் கைது செய்யபட்டார்.

Similar News

News October 14, 2025

நெல்லை: கரூர் விவகாரம் – நயினார் நாகேந்திரன் அறிக்கை

image

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்பதை நிறுவ எதிர் தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்துக்கு கட்டுக்கதைகளை புனைந்து வந்தது திமுக அரசு. இந்த அவசரத்திற்கு பின்னால் ஏதோ ஒரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்து இருக்கிறது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது. அப்பாவி பொதுமக்களை காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என நயினார் அறிக்கை.

News October 14, 2025

நெல்லை: தேர்வு இல்லாமல் – அரசு வேலை வேணுமா?

image

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 14, 2025

நெல்லை: சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மாவட்டத்தில் அரசு தேர்வு துறை மூலம் மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை அனைவருக்கும் உரிய மேல்நிலை பொதுத்தேர்வு எழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாதவர்களுக்கு வருகிற ஜனவரி 10ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கபட்டுள்ளது. அதன் பின்னர் அறிவிப்பு இன்றி அளிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே சம்பந்தபட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!