News December 31, 2025
நெல்லை: கோர விபத்தில் பலி., சிதறிய உடல்!

நாங்குநேரியை பகுதியில் நெல்லை நான்கு வழிச்சாலையில் நேற்று முன் தினம் இரவு, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஆண் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அவரது உடல் மீது ஏறி சென்றதால் உருக்குலைந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீஸார் அவரது உடல் பாகங்களை மீட்டு நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
நெல்லை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 31, 2025
நெல்லையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநகர மற்றும் ஊரக காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகரத்தில் 500 காவல் துறையினரும், மாவட்டத்தில் 1500 காவல்துறையினரும் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.
News December 31, 2025
நெல்லை: சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் பணி

நெல்லை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 15 சமையல் உதவியாளர் பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தகுதியான பெண்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பெண்கள் ஜன.3 முதல் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT


