News December 7, 2024
நெல்லை-கொல்லம் நேரடி பகல் ரயிலை இயக்க வலியுறுத்தல்!

மீட்டர் கேஜ் பாதையில் தென்காசி வழியாக சென்ற நெல்லை-கொல்லம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து பாண்டியராஜா மற்றும் நிர்வாகிகள் தென்னக ரயில்வே அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 7, 2026
நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

நாங்குநேரி அருகே பெரும்பத்து பஜாரில் கடந்த 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் வந்த கும்பல் ரோட்டின் அருகே டீக்கடையில் நின்ற மக்களை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சள் குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.
News March 7, 2026
தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


