News January 14, 2026

நெல்லை: கூட்டத்தில் புகுந்த அரசு பேருந்தால் ஒருவர் பலி

image

நெல்லை காந்திநகர் பகுதியை சேர்ந்த பொன் பரமசிவன்(25), டவுனை சேர்ந்த ராஜ கல்யாணி(31) உள்ளிட்டோர் ஒரு குழுவாக நேற்று மாலை திருச்செந்தூருக்கு பாதையாத்திரை சென்றுள்ளனர். கிருஷ்ணாபுரம் பகுதியில் இவர்கள் சென்ற போது நெல்லை – திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து பாதையாத்திரை கூட்டத்துக்குள் புகுந்ததில் பொன்பரமசிவன் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 9, 2026

திருநெல்வேலி: மர்மமான முறையில் ஒருவர் கொலை

image

நெல்லை மூன்றடைப்பு காவல் நிலைய சரகம் பாணாங்குளத்தில் நேற்று இரவு இசக்கி பாண்டி(48) என்ற நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மூன்றடைப்பு காவல்துறையினர் சம்பவ இடம் சென்று இறப்பிற்கான காரணம் குறித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News February 9, 2026

திருநெல்வேலியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை, பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

News February 9, 2026

நெல்லை: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

image

நெல்லை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நெல்லை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0462- 2576265. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!