News November 6, 2025
நெல்லை காவல் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் கார்த்தி மணி உத்தரவுபடி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை இரவு காவல் பணியில் செயல்படும் அதிகாரிகள் காவல் நிலைய பகுதி வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 5, 2025
நெல்லை: அன்புமணி மீது போலீசார் வழக்கு பதிவு

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த அக்டோபர் 7ம் தேதி நெல்லைக்கு வருகை தந்தார் அவர் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை சென்று அங்கே ஆற்றைக் காப்பாற்ற கோரி கோஷமிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் முறையாக அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 5, 2025
கை துண்டிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை

களக்காடு பத்மநேரியைச் சேர்ந்த இசக்கி என்ற 21 வயது இளைஞர் இடது கை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ அலுவலர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து மீண்டும் கையை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர் என டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிகிச்சை அளித்த டாக்டர்களை அவர் பாராட்டினார்.
News November 5, 2025
நெல்லை: இந்த எண்களை SAVE பன்னிக்கோங்க!

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்..
திசையன்விளை- 9384094224
சேரன்மகாதேவி- 9384094223
மானூா்- 9384094222
இராதாபுரம்- 9445000674
நாங்குநேரி- 9445000673
அம்பாசமுத்திரம்- 9445000672
பாளையங்கோட்டை- 9445000669
திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க


