News May 9, 2024

நெல்லை காங். தலைவர் கொலை: முக்கிய நடவடிக்கை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 6 தினங்கள் கடந்த நிலையில் உண்மை குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த நிலையில் அவர் இறந்தபோது மாயமான அவரது 2 செல்போன் இருப்பிடத்தை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தொழில் நுட்ப ரீதியான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் கிடைத்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 1, 2026

நெல்லை: ஒரே இடத்தில் 488 மது பாட்டில் பதுக்கல்

image

கங்கைகொண்டான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் நேற்று (ஜனவரி 31) இரவு ஆலடிப்பட்டி பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மணி (63) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 488 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

News February 1, 2026

நெல்லை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News February 1, 2026

நெல்லை: போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற மூவர்

image

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் மற்றும் காவல் துறையினர் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் இன்று வாகன தணிக்கை செய்தனர். அங்கே சந்தேகப்படும்படி வந்த மேலப்பாளையம், குறிச்சி முத்துராம் (19), பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு சிறாரை பிடித்து விசாரித்தபோது மூவரும் அரிவாளால் தாக்க முயன்றனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!