News December 30, 2024
நெல்லை கண்காணிப்பு அலுவலருக்கு பதவி உயர்வு

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக சந்தீப் நந்தூரி உள்ளார். அவர் ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று (டிச.29) ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Similar News
News August 22, 2025
BREAKING: நெல்லை வந்தடைந்தார் அமித்ஷா

நெல்லை மாவட்டத்தில், பாஜக பூத்கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா நெல்லை வந்தடைந்தார். நயினார் நாகேந்திரன் வீட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்முருகன், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பின்னர் நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
News August 22, 2025
நெல்லை: வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் அறை நெல்லை ரயில் நிலையம் அருகே உள்ள பாலபாக்கிய நகர் பகுதியில் உள்ளது. அங்கு சமையலறை பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொதிக்கும் எண்ணெய் சட்டி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News August 22, 2025
நெல்லை: ரூ.1,31,500 சம்பளத்தில் வேலை APPLY NOW

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <