News June 25, 2024
நெல்லை கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: முதல்வர் விளக்கம்

நெல்லையில் மார்க். கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக கட்சி அலுவலகம் மீது தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இதுபோன்ற பிற்போக்குத்தனமான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News September 3, 2025
BREAKING நெல்லை: 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, ராதாபுரம் தலைமை ஆசிரியை ரத்தினாள் சுமதி, மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன், வீரள பெருஞ்செல்வி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா புஷ்பராணி, ஆசிரியை பாக்கியலட்சுமி உள்ளிட்ட 9 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
News September 3, 2025
நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செப்டம்பர் 7, 10, 13, 14 தேதிகளில் நெல்லை ஸ்ரீபுரத்தில் ரோஹிணி கோல்டு அகாடமியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது. தங்கத்தின் தரம், ஹால்மார்க், உரைகல், கேரட், விலை நிர்ணயம், போலி நகைகள் கண்டறிதல் குறித்து கற்பிக்கப்படும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பயிற்சியில் மேலும் விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும். *ஷேர்
News September 3, 2025
நெல்லையில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளையங்கோட்டை, வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள ஈப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.