News March 31, 2025

நெல்லை: கடன் தொல்லை தீர்க்கும் ஆலயம்

image

பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் கோயில் கொண்டு அருளாட்சி செய்கிறாள் ஸ்ரீஆயிரத்தம்மன். இங்கு, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது விசேஷம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ராகுகாலத்தில் மாதுளைத் தோலால் நெய்விளக்கேற்றி, தொடர்ந்து 41 நாட்கள் வழிபடுகிறார்கள். பக்தர்கள் அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, மனதார வேண்டிக் கொண்டால் கடன் தொல்லைகள் தீரும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*

Similar News

News April 2, 2025

குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

image

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

நெல்லைக்கு கன மழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (ஏப்.4) அன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

News April 2, 2025

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை கொடியேற்றம்

image

களக்காட்டில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இதில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், இரவில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

error: Content is protected !!