News February 8, 2026
நெல்லை: கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது

திருக்குறுங்குடி போலீஸ் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா புதூர் அருகே நின்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் (32), நம்பிராஜா (23), இசக்கி ராஜா (28) ஆகிய 3 பேரை பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Similar News
News February 9, 2026
நெல்லை: ரயில் மோதி ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகே நேற்று முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த செங்கோட்டை பயணிகள் ரயில் மோதி முதியவர் பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 9, 2026
மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
News February 9, 2026
மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.


