News September 12, 2025
நெல்லை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

திருநெல்வேலி, மானூரில் 2018-ல் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி மகாராஜனுக்கு திருநெல்வேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.மேலும் முறையின்றி தடுத்தல் மற்றும் ஆபாசமாக பேசிய குற்றங்களுக்காகவும் தண்டனை வழங்கப்பட்டது. காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பாராட்டினார். இந்த ஆண்டில் மட்டும் 17 கொலை வழக்குகளில் தண்டனை வழங்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 12, 2025
நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476,9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News September 12, 2025
நெல்லை: அமரர் ஊர்தி உரிமையாளர் விபத்தில் பலி

மூலைக்கரைப்பட்டி அருகே காரியாண்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. அமரர் உறுதி உரிமையாளரான இவர் கடந்த 4ம் தேதி மாலை பைக்கில் மூலைக் கரைப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கீழக்கோடங்குளம் அருகே வந்த போது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட சின்னத்துரை நேற்று உயிரிழந்தார்.
News September 12, 2025
நெல்லை பயணிகளுக்கு புதிய வசதி

நெல்லையிலிருந்து அவசரப் பணிக்கு சென்னை செல்பவர்கள் தூத்துக்குடி விமான நிலையம் சென்று விமானத்தில் பறக்கின்றனர். நெல்லையில் இருந்து விமான நிலையம் 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதை இணைக்கும் நான்கு வழிச்சாலையில் தடையின்றி செல்வதற்கு வசதியாக பாளை அருகே வசவப்பபுரம், முறப்பநாடு, மங்களகிரி உள்ளிட்ட 5 பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.