News April 19, 2024

நெல்லை: ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி

image

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்தல் மையத்தில் வாக்காளர்களுடன் ஒருமையில் பேசிய தேர்தல் மைய அதிகாரி ஜெபஸ்டின் கோவில் பிள்ளையை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மற்றும் வட்டாட்சியர் உதவியுடன் காவல் துறையினர் வாக்கு மையத்திலிருந்து குண்டு கட்டாக வெளியேற்றினர். அவருக்கு பதிலாக அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் நியமிக்கப்பட்டார்.

Similar News

News December 29, 2025

நெல்லை மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க!

image

நெல்லை மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 29, 2025

நெல்லை: மனைவி இறந்த சோகத்தில் கணவர் விபரீத முடிவு!

image

நெல்லை சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மயில்ராஜ் வயது (68). இவரது மனைவி மற்றும் ஒரே மகள் இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனால் சோகத்தில் தவித்த அவர் நேற்று விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 29, 2025

நெல்லை: பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி!

image

கங்கைகொண்டான் சிப்காட் அருகே ஆலடிப்பட்டியில் இருந்து 2 பேர் நேற்று பைக்கில் சென்றனர். அப்போது குமரியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஓட்டப்பிடாரம் முனியசாமி 36 சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற உலகநாதன் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!