News September 15, 2025

நெல்லை: எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள்

image

மதுரை விமான நிலையம் குறித்து இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பேசியதாக சொல்லபடுகிறது. அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறோம் என தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

நெல்லை: கொடுமுடியாறு அணையில் நீர் திறப்பு

image

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கபட்டது. 52.50 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம், கடந்த மாதம் பெய்த மழையால் 50 அடி தாண்டியது. தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 49 அடியாக உள்ளதால் நாங்குநேரி ராதாபுரம் வட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை ஏற்று, அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதால் பேரவை தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

News November 11, 2025

நெல்லை: டிகிரி போதும்…வங்கியில் வேலை!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செ<<>>ய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 11, 2025

நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை

image

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி மகள் உடல் நல குறைவால் கடந்த ஆண்டு அம்பையில் உயிரிழந்தார். இதனால் தீராத சோகத்தில் ஒராண்டாக வசித்து வந்த அமுதவள்ளி நேற்று அதிகாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!