News December 21, 2024

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

image

வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நேரம் மாற்றப்படுகிறது. நெல்லையிலிருந்து இரவு 8.05 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணி போர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Similar News

News March 6, 2026

BREAKING திருநெல்வேலி: பஸ் மோதி இருவர் பலி

image

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே இன்று கட்டுப்பாட்டை இழந்த கேரள அரசுப் பேருந்து மோதி அருகில் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஹரிஹரசுதன்(26), நாகராஜன் (25) ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்தனர்.

News March 6, 2026

திருநெல்வேலி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <<-1>>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 6, 2026

நாங்குநேரி: கொலையானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி கொலை செய்தது. இதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று வீட்டில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அதேபோல் வட மாநில தொழிலாளி திரிநாத் கட்டாவின் குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்கினார்.

error: Content is protected !!