News February 8, 2026
நெல்லை: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT.
Similar News
News February 8, 2026
புத்தகத் திருவிழா: சிஇஓ முக்கிய அறிக்கை

நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: புத்தகத் திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6, 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை நாளை மாலை 3 மணிக்கு பள்ளிகளில் வகுப்பறை, கலையரங்கம் திறந்த வெளி போன்ற பகுதிகளில் அமர வைத்து நூல்களை குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசிக்க வைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.
News February 8, 2026
நெல்லை: போஸ்ட் ஆபீஸில் சூப்பர் வேலை ரெடி! தேர்வு இல்லை

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் <
News February 8, 2026
நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நெல்லை மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE


