News December 6, 2024
நெல்லை இளைஞர் குண்டாசில் கைது

நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சொக்கலிங்கம்(28) என்பவர் கைதாகி சிறையில் உள்ளார். இவர் பல வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலில் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சொக்கலிங்கம் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News August 10, 2025
ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு

கருங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் பாளை திருச்செந்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியதில் பாலமுருகன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து சிவந்திப்பட்டி போலீசார் விசாரணை.
News August 10, 2025
நெல்லை: ரேஷன் கார்டு ONLINEல விண்ணப்பிப்பது எப்படி?

நெல்லை மக்களே!
1. இங்கு <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!
News August 10, 2025
ரக்ஷா பந்தன் சகோதரிகளுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவிப்பு

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் திருவிழா நேற்று நாடு முழுவதும் வட இந்தியர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பெண்கள் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றனர். இதற்கு அவர் நன்றி தெரிவித்து தனது வலைதளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.